search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண்டெய்னர் லாரி"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • லாரி வெளியே செல்லும் பாதையில் செல்லாமல் எதிர் திசையில் முகாம் அலுவலகத்தை விட்டு மர்மமான முறையில் வெளியேறியது.
    • கண்டெய்னர் லாரி வந்து சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் தாடே பள்ளியில் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியின் முகாம் அலுவலகம் உள்ளது.

    இந்த அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் கண்டெய்னர் லாரி ஒன்று வந்தது. வழக்கமாக முகாம் அலுவலகத்திற்கு வரும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு பிறகு உள்ளே அனுப்பபடுகின்றன.

    ஆனால் இந்த லாரி சோதனை எதுவும் செய்யப்படவில்லை. சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் அங்கு நின்ற லாரி வெளியே செல்லும் பாதையில் செல்லாமல் எதிர் திசையில் முகாம் அலுவலகத்தை விட்டு மர்மமான முறையில் வெளியேறியது.

    கண்டெய்னர் லாரி வந்து சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது. இது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.

    இந்த நிலையில் தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் நாரா லோகேஷ் இதுகுறித்து தேர்தல் அதிகாரி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில்:-

    ஜெகன்மோகன் ரெட்டி முகாம் அலுவலகத்திற்கு வந்த லாரியில் கட்டு கட்டாக பணம் இருந்திருக்கலாம். அதனை எந்திரங்கள் மூலம் எண்ணி அனுப்பி வைத்துள்ளனர் அல்லது ஆந்திர பிரதேச தலைமை செயலகத்தில் மறைத்து வைக்கப்பட்ட கோப்புகள் கடத்தி வரப்பட்டு இருக்கலாம். ஒருவேளை லாரியில் போதைப்பொருட்கள் கூட இருந்திருக்கலாம் என கூறினார்.

    ஆந்திர மாநிலத்தில் உள்ள மற்ற எதிர்க்க ட்சிகளும் இது தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளனர்.

    இது தொடர்பாக ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூறுகையில்:- தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்கள் தேவையற்ற ஒரு நாடகத்தை உருவாக்குகிறார்கள்.

    பல அரசு துறைகள் முதல்வரின் முகாம் அலுவலகத்தில் இயங்குகிறது. சம்பந்தப்பட்ட வாகனம் அலுவலகங்களுக்கு பொருட்களை எடுத்துச் சென்றிருக்கலாம்.

    அவர்கள் சொல்வது போல பணம் எதுவும் கொண்டு வரப்படவில்லை. விசாகப்பட்டினத்தில் பிடிபட்ட போதை பொருள் நிரப்பப்பட்ட கண்டெய்னர் லோகேஷின் உறவினர்களுக்கு சொந்தமானது என்பது மக்களுக்கே தெரியும் என்றார்.

    • கோடிக்கணக்கான பணத்துடன் வந்த லாரி, காரின் பின் பக்கத்தில் எதிர்பாராத விதமாக மோதியது.
    • மரப்பாலம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    புதுச்சேரி:

    கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் சேகரிக்கப்பட்ட பணக்கட்டுகள் கண்டெய்னர் லாரியில் ஏற்றப்பட்டு, ரிசர்வ் வங்கியின் சென்னை கிளைக்கு சென்றது. கண்டெய்னர் லாரியில் கோடிக்கணக்கில் பணம் இருந்ததாக கூறப்படுகிறது.

    அந்த கண்டெய்னர் லாரிக்கு முன்னும் பின்னும் 2 வாடகை கார்களில் கடலூர் போலீசார் துப்பாக்கியுடன் பாதுகாப்புக்கு சென்றனர். கிழக்கு கடற்கரை சாலையில் பாதுகாப்பு வாகனங்களுடன் கண்டெய்னர் லாரி புதுச்சேரி மரப்பாலம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படவே முன்னால் பாதுகாப்புக்கு போலீசார் சென்ற காரின் டிரைவர் திடீர் பிரேக் பிடித்தார்.

    இதனால் பின்னால் கோடிக்கணக்கான பணத்துடன் வந்த லாரி, காரின் பின் பக்கத்தில் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் காரின் பின்பக்கம் சேதமடைந்தது.

    இந்த விபத்தில் அதிர்ஷ்ட வசமாக காரில் இருந்த போலீசார் உயிர்தப்பினர். அதே நேரத்தில் கோடிக்கணக்கான ரூபாயுடன் விபத்து ஏற்பட்டதால் பாதுகாப்புக்கு வந்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

    பொதுமக்களும் போலீசார் நடுரோட்டில் துப்பாக்கியுடன் நிற்பதை கண்டு என்ன ஏதேன்று விசாரிக்க தொடங்கினார்கள்.

    சுதாரித்துக்கொண்ட போலீசார் உடனடியாக மாற்று வாகனம் ஏற்பாடு செய்து அதில் ஏறி, கண்டெய்னர் லாரியுடன் பாதுகாப்புக்கு சென்றனர். இந்த சம்பவம் காரணமாக மரப்பாலம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • கடலுக்குள் கவிழ்ந்த கண்டெய்னர் இன்னும் மீட்கப்படவில்லை.
    • மீஞ்சூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் உள்ள அதானி பெர்த்தில் கண்டெய்னர் லாரியை டிரைவர் குமரேசன் என்பவர் இன்று அதிகாலை ஓட்டி சென்றார். அப்போது அவர் தூக்க கலக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, துறைமுக உள்பகுதி கடலில் கவிழ்ந்து தலைக்குப்புற விழுந்தது. உடனடியாக அங்கிருந்த துறைமுக பணியாளர்கள், டிரைவர் குமரேசனை மீட்டனர். காயமடைந்த அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடலுக்குள் கவிழ்ந்த கண்டெய்னர் இன்னும் மீட்கப்படவில்லை. இதுகுறித்து மீஞ்சூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக லாரிகளுக்கு கட்டுப்பாடு விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
    • சென்னைக்குள் வெளியூர் வாகனங்கள் வரும் மூன்று தேசிய நெடுஞ்சாலைகளில், இந்த தடை அமலில் இருக்கும்.

    சென்னை:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து அதிகமான மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.

    இவர்களின் தேவையை கருத்தில் கொண்டு கோயம்பேடு பஸ் நிலையம் மட்டுமல்லாது, கே.கே. நகர், தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    அந்த சமயத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக லாரிகளுக்கு கட்டுப்பாடு விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து போக்குவரத்து துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு அதிக எண்ணிக்கையில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் நிலையில் சாலைகளில் நெரிசல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள, சம்பந்தப்பட்ட துறைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

    இதன்படி, நவ. 9, 10, 11 ஆகிய நாட்களில், மாலை 5 மணி முதல் அதிகாலை 2 மணி வரை, சென்னைக்குள் கண்டெய்னர் லாரிகளை இயக்க தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    குறிப்பாக, சென்னைக்குள் வெளியூர் வாகனங்கள் வரும் மூன்று தேசிய நெடுஞ்சாலைகளில், இந்த தடை அமலில் இருக்கும்.

    இந்த சமயத்தில் நகருக்கு வெளியில் தேசிய நெடுஞ்சாலைகளை ஒட்டி, கண்டெய்னர் லாரிகள் நிறுத்தி வைப்பதற்கான தற்காலிக இடங்களை ஒதுக்க காவல் துறை, நெடுஞ்சாலை துறை, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ.வுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எதிரே வந்த கண்டெய்னர் லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அதிராம்பட்டினம்:

    பட்டுக்கோட்டை அருகே சேதுபாவாசத்திரம் அடுத்த மனோரா சுற்றுலா தலத்திற்கு பட்டுக்கோட்டை பாளையம் பகுதியை சேர்ந்த பிரவீன் (வயது 22) மற்றும் அவரது நண்பர் பாப்பாநாடு ஆம்லாபட்டு பகுதியை சேர்ந்த ஹரிஷ் (21) ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.

    அப்போது கிழக்கு கடற்கரை சாலையில் மல்லிப்பட்டினம் அருகே சென்றுகொண்டிருந்த போது, எதிரே வந்த கண்டெய்னர் லாரி நிலைதடுமாறி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் உடல் நசுங்கி பிரவீன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    படுகாயம டைந்த ஹரிஷை அக்கம் பக்கத்தினர் மீட்டு பேராவூ ரணி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, சேதுபாவா சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தூத்துக்குடிக்கு எரிவாயு ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி சென்றது
    • மின்வாரிய ஊழியர்கள் மின்கம்பத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    நாகர்கோவில் :

    கேரளாவில் இருந்து நாகர்கோவில் வழியாக தூத்துக்குடிக்கு எரிவாயு ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி சென்றது. இன்று காலை வடசேரி பகுதியில் வந்தபோது அந்த பகுதியில் உள்ள மின்கம்பம் மீது லாரி மோதியது. இதில் மின்கம்பம் உடைந்தது.

    மின்கம்பிகளும் அறுந்து விழுந்ததால் அந்த பகுதியில் மின்சாரம் தடைப்பட்டது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் வடசேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். மின்வாரிய ஊழியர்களும் சம்பவ இடத்திற்கு வந்து உடைந்து விழுந்த மின்கம்பத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    • ஈரோடு மாவட்டம் பவானி நெடுஞ் சாலையை அகலப்ப டுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
    • நேற்று நள்ளிரவில் எதிர்பாராத விதமாக இந்த சாலையோர பள்ளத்தில் இறங்கியது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து தடைப்பட்டது.

    மேட்டூர்:

    தர்மபுரி மாவட்டம் தொப்பூர் - ஈரோடு மாவட்டம் பவானி நெடுஞ் சாலையை அகலப்ப டுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக இந்த வழித்தடத்தில் உள்ள சிறிய பாலங்கள், கல்வெட்டு கள் அகலப்படுத்தப்பட்டு வருகிறது.

    இதன்படி, சேலம் மாவட்டம் மேட்டூர் அனல்மின் நிலைய 4 ரோடு அருகே உள்ள கல்வெட்டை அகலப்படுத்தும் பணிக்காக சாலையை ஒட்டி பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில், கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்ற கண்டெய்னர் லாரி ஒன்று, நேற்று நள்ளிரவில் எதிர்பாராத விதமாக இந்த சாலையோர பள்ளத்தில் இறங்கியது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து தடைப்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மேட்டூர் போலீசார், பொதுமக்கள் ஒத்துழைப்புடன் கிரேன் மூலம் கண்டெய்னர் லாரியை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    சில மணி நேர போராட்டத்திற்கு பிறகு லாரி மீட்கப்பட்டு, அந்த வழித்தடத்தில் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.

    • கண்டெய்னர் லாரி மோதி வாலிபர் பலியானார்.
    • கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் முன்னால் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது பலமாக மோதியது.

    திருமங்கலம்

    திருவள்ளூர் மாவட்டம் புத்தாகரம் பகுதியைச் சேர்ந்தவர் காளியப்பன் மகன் ஈஸ்வரன் (வயது24). இவர் நெல்லையில் உள்ள தனது நண்பரை சந்திக்க மோட்டார் சைக்கிளில் சென்றார். அவர் திருமங்கலம் அருகே நான்கு வழிச்சாலையில் குதிரைசாரிகுளம் அருகே சென்றபோது, எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி மீது மோட்டார் சைக்கிள்  பலமாக மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த ஈஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து பற்றி அறிந்த போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து ஈஸ்வரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து தொடர்பாக ஈஸ்வரனின் தாய் மாரியம்மாள் திருமங்கலம் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரூ.40 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • டிரைவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சூலூர்,

    சூலூர் அருகே அப்பநாயக்கன்பட்டி பகுதியில் செலகரைச்சல் செல்லும் சாலையோரத்தில் மின் கம்பம் உள்ளது. இந்த மின் கம்பத்தில் மும்பையில் இருந்து சரக்குகளை ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து மோதியது.

    இதில் மின்கம்பம் உடைந்து மின் கம்பிகளுடன் சாலையில் விழுந்தது. இதுகுறித்து மின்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அதிகாரிகள் மின்சாரத்தை துண்டித்தனர். இதனால் எந்த வித அசம்பாவிதமும் அங்கு ஏற்படவில்லை.

    இதனையடுத்து செலக்கரைச்சல் மின்வாரிய அதிகாரிகள் விபத்து குறித்து சூலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த விபத்தினால் மின்வாரியத்திற்கு ரூ.40 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும் இந்த விபத்தினால் மின் கம்பத்தில் இருந்து தனியார் நிறுவனத்திற்கு சென்ற மின் கம்பியும் துண்டிக்கப்பட்டது. இதில் அந்த நிறுவனத்திற்கு ரூ.1 லட்சத்திற்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்டெய்னர் லாரியை ஓட்டி வந்த மும்பையை சேர்ந்த டிரைவர் முகமது யூசுப் கான் (30) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கண்டெய்னர் லாரியின் பூட்டை உடைத்து அதிலிருந்து செல்போன் லேப்டாப் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை தாங்கள் கொண்டு வந்த கார்களில் ஏற்றிக்கொண்டு தப்பிச் சென்றனர்.
    • தேசிய நெடுஞ்சாலையில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது கொள்ளை நடந்தபோது லாரி டிரைவர் ஜுபேரும் உடன் இருந்தது தெரிய வந்தது.

    திருப்பதி:

    அரியானா மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து தனியார் கொரியர் நிறுவனத்தின் கண்டெய்னர் லாரியில் சுமார் 2 கோடி மதிப்பிலான லேப்டாப், செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி வந்து கொண்டு இருந்தது. லாரியை ஜுபேர் என்பவர் ஓட்டி வந்தார்.

    லாரி ஆந்திர மாநிலம் கடப்பா ஒய்.எஸ்.ஆர் மாவட்டம், குடிப்பாடு தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது தன்னுடைய லாரியில் விலை உயர்ந்த லேப்டாப் செல்போன் உள்ளிட்டவை எடுத்து வருவதாக பெங்களூருவை சேர்ந்த சல்மான் அகமது, முகமது ரஹ்மான் ஷெரிப் ஆகியோருக்கு லாரி டிரைவர் ஜுபேர் தகவல் கொடுத்தார்.

    இதையடுத்து அவர்கள் 2 பேரும் 2 கார்களில் தங்களது நண்பர்களை அழைத்துக்கொண்டு கண்டெய்னர் லாரி இருந்த இடத்திற்கு வந்தனர். அப்போது கண்டெய்னர் லாரியின் பூட்டை உடைத்து அதிலிருந்து செல்போன் லேப்டாப் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை தாங்கள் கொண்டு வந்த கார்களில் ஏற்றிக்கொண்டு தப்பிச் சென்றனர்.

    லாரி டிரைவர் ஜுபேர் தேசிய நெடுஞ்சாலையில் லாரியை நிறுத்திவிட்டு தூங்கிக்கொண்டு இருந்தபோது மர்ம நபர்கள் லாரியில் இருந்த பொருட்களை திருடி சென்றதாக கடப்பா போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கடப்பா டிஎஸ்பி வெங்கடேஷ் சிவா ரெட்டி தலைமையில் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது கொள்ளை நடந்தபோது லாரி டிரைவர் ஜுபேரும் உடன் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து லாரி டிரைவர் ஜுபேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொள்ளையில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார்.

    ஜுபேர் நண்பர்களின் செல்போன் எண்ணை சோதனை செய்தபோது அவர்கள் காரில் ஐதராபாத் நோக்கி செல்வது தெரிய வந்தது. இதையடுத்து ஐதராபாத் அருகே உள்ள சோதனை சாவடியில் போலீசார் சோதனையை தீவிரப்படுத்தினர்.

    அப்போது அந்த வழியாக வந்த காரை மடக்கி நிறுத்தினர். போலீசாரை கண்டதும் காரில் இருந்தவர்கள் தப்பி ஓடினர். போலீசார் அவர்களை விரட்டி சென்று 2 பேரை மட்டும் மடக்கி பிடித்தனர். மற்ற 4 பேர் தப்பி ஓடிவிட்டனர்.

    போலீசார் காரில் சோதனை செய்தபோது கண்டெய்னர் லாரியில் கொள்ளையடிக்கப்பட்ட செல்போன், லேப்டாப் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் இருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து டிரைவர் உள்பட 3 பேரை கைது செய்த போலீசார் காருடன் கொள்ளைபோன பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    • இன்று காலை கோவையில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூர் சென்ற கண்டெய்னர் லாரி காலை 7 மணியளவில் திம்பம் மலைப்பாதை 9 வளைவில் திரும்பும் போது பழுதாகி நின்றது.
    • இதனால் திம்பம் மலைப்பாதையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

    தாளவாடி:

    தாளவாடி அடுத்த திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டைஊசி வளைவுகள் உள்ளன. இந்த மலைப்பாதை வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன.

    தமிழகம்-கர்நாடக இடையே முக்கிய போக்குவரத்தாக உள்ள இந்த பாதையில் அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

    இந்நிலையில் இன்று காலை கோவையில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூர் சென்ற கண்டெய்னர் லாரி காலை 7 மணியளவில் திம்பம் மலைப்பாதை 9 வளைவில் திரும்பும் போது பழுதாகி நின்றது. இதனால் வாகனங்கள் ஏதும் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    பின்னர் பண்ணாரியில் இருந்து மெக்கானிக் வரவழைக்கப்பட்டு பழுது நீக்கும் பணி நடைபெற்றுவருகிறது. இதனால் திம்பம் மலைப்பாதையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

    கோவை ஆத்துப்பாலம் அருகே தறிகெட்டு ஓடிய கண்டெய்னர் லாரியில் பணம் இருப்பதாக வதந்தி பரவியதை அடுத்து பொதுமக்கள் லாரியை சிறைப்பிடித்தனர். #ContainerLorry
    கோவை ஆத்துப்பாலம் அருகே சாலையில் தாறுமாறாக கண்டெய்னர் லாரி சென்றது.  அப்போது லாரியில் பணம் இருப்பதாக வதந்தி பரப்பப்பட்டதால் பொதுமக்கள் அதிகமாக அந்த இடத்தில் கூடினர்.

    அப்போது லாரியை முற்றுகையிட்ட பொது மக்கள் கண்டெய்னர் லாரியின் பூட்டை உடைக்க முற்பட்டனர். இதனால் அந்த இடத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து காவல் துறையின்ர் சம்பவ இடத்திற்கு வந்து பொது மக்களை களைந்து செல்லுமாறு அறிவித்தனர்.  

    பொது மக்கள் அந்த இடத்தை விட்டு செல்ல மறுத்த நிலையில் சம்பவ இடத்திற்கு தேர்தல் பறக்கும் படையினர் வந்து லாரியை பறிமுதல் செய்து ஓட்டுநரிடம் விசரணை செய்து வருகின்றனர்.  அப்போது லாரியின் ஓட்டுனர் லாரியில் டீ தூள் இருப்பதாக தெரிவித்துள்ள நிலையல் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் பொது மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அந்த இடத்திலேயே பூட்டை திறக்க வேண்டும் என தெரிவித்தனர். அதற்கு பதில் அளித்த அதிகாரிகள் இங்கு இதனை திறப்பது சட்டப்பிரச்சனை ஏற்படும் என்று தெரிவித்த அதிகாரிகள் லாரியை ஆட்சியர் அலுவலகத்திற்கு எடுத்து சென்று திறக்க ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்தனர்.

    தொடர்ந்து அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி வரும் நிலையில் பொது மக்கள் லாரியை சூழ்ந்து கொண்டு அவ்விடம் விட்டு செல்ல மறுத்துவரும் நிலையில் கோவை ஆத்துப்பாலம் அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  கண்டெய்னர் லாரியை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு நிலவி வருகிறது. பொதுமக்களை கலைந்து செல்லுமாறு உதவி ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    ×